உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது உங்களுக்கு அருகிலுள்ள யாராவது ஒருவரை பற்றி நீங்கள் கவலைப்படலாம். வீடுகளில் நிகழ்கின்ற துஷ்பிரயோகம் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய வகையில் இந்த வழிகாட்டல் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் நபரையும் அவரின் பிள்ளைகளையும் பாதிக்கின்றன.
துஷ்பிரயோகத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. துஷ்பிரயோகம் செய்யும் துணைவர்கள் அடிக்கடி சிகிச்சை அளிக்கப்படாத அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். ஆனால் இந்த அதிர்ச்சி அவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் நியாயப்படுத்தாது. துரதிஷ்டவசமாக, அவர்கள் உறுதியளித்தாலும் கூட, அவர்களிடம் மாறுவதற்கான ஆற்றல் அரிதாகவே உள்ளது.
குற்றவாளிகள் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்த பொதுவான உத்திகளைப் பயன்படுத்துவார்கள். அவர்களின் துஷ்பிரயோகத்தை தொடர்ந்து செய்ய அநேகமாக சட்ட முறைமையை பயன்படுத்துவார்கள். எவ்வாறாயினும், நீதிபதிகள், காவல்துறையினர், ஊடகங்கள், சமூகம் ஆகிய அனைவரும் அத்தகைய குற்றவாளி இயக்கப்படும் தந்திரோபாயங்களையும் நடத்தை முறைகளையும் இனங்காணத் தொடங்கியுள்ளனர்.
வீட்டுத் துஷ்பிரயோகம் என்பது தனிப்பட்ட விஷயமல்ல. வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், உங்கள் ஆதரவு அவரின் உயிரைக் காப்பாற்றலாம். அவசர நிலைகளில், 17 என்ற இலக்கத்தின் ஊடாக இல் போலீஸை அழைக்கவும் அல்லது 114 இற்கு SMS அனுப்பவும்.